×
 

தொடரும் ரெய்டு..! அரசியலில் பரபரப்பு... எனக்கென்ன பயம்.? செந்தில்பாலாஜி திட்டவட்டம்..!

விசாரணை நிறைவு பெற்ற நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு, மாநிலத்தின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்-இல் நீண்டகாலமாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் வருவாய் இழப்புகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முந்தைய தி.மு.க அரசின் காலத்தில் “கட்சி நிதி” என்ற பெயரில் பெரும் தொகை திசைதிருப்பப்பட்டதாக முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் என்பது தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகும். இது மாநிலத்தில் மதுபான விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அரசு நிறுவனம். முதல்வர் விஜய்யின் அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே டாஸ்மாக் செயல்பாடுகளில் உள்ள வருவாய் கசிவுகள், அங்கீகரிக்கப்படாத பண வசூல் மற்றும் “கட்சி நிதி” முறைகள் குறித்து விரிவான ஆய்வை உத்தரவிட்டார். அரசு வட்டாரங்களின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 102 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் செயல்பாடுகளில் இருந்து “கட்சி நிதி” என்ற பெயரில் திசைதிருப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது சுமார் 1,600 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் டாஸ்மாக்கின் முழு சப்ளை சங்கிலியிலும் கொள்முதல், கிடங்கு, போக்குவரத்து, சில்லறை விற்பனை என பல ஆண்டுகளாக ஊடுருவியிருந்ததாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழல், பார்ட்டி ஃபண்ட் தொடர்பாக 41 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள செந்தில் பாலாஜியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் நான்கு மணி நேரத்தை கடந்து விசாரித்த நிலையில் தற்போது விசாரணை நிறைவு பெற்றுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானம் கொள்முதலில் பார்த்திபன் என்ற பெயரில் பணம் வசூலித்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்தது. கரூரில் செந்தில் பாலாஜி என் வீடு மற்றும் நெருக்கமானவர்களின் வீடு என ஆறு இடங்களை சோதனை நடைபெறும் நிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்த அடி... கரூரை சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை... திமுக ஒன்றிய செயலாளர் வீட்டிலும் ரெய்டு...!

விசாரணை நிறைவு பெற்ற நிலையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளித்தேன் என்று தெரிவித்தார். டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என கூறினார். சோதனைகளை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்றும் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை எனவும் எனது அறையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share