×
 

தடகளப் போட்டியில் வெண்கலப்பதக்கம்! தமிழக வீரருக்கு உதயநிதி மனமார்ந்த பாராட்டு...

26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து கூறியுள்ளார்.

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் 343 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இந்த தொடரில் இந்திய அணி சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியின், நடைபோட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலம் வென்று அசத்தினார். 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ இலக்கை கடந்து செர்வின் வென்றுள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்., இந்த மதிப்புமிக்க சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். எங்கள் சர்வதேச மிஷன் பதக்கத் திட்டத்தின் (MIMS) விளையாட்டு வீரரான செர்வினின் சிறந்த சாதனையில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம்., அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன், எதுவும் எட்ட முடியாதது என்பது ஒவ்வொரு இளைஞருக்கும் இது ஒரு சக்திவாய்ந்த செய்தி., நமது நாட்டிற்கும் நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்ததற்காக வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: ED இல்ல மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம்.. துணை முதல்வர் உதயநிதி தடாலடி!!

மேலும், எதிர்காலத்தில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம்., உங்கள் இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதி Cell No. 2..! புழல் சிறை..! பாஜக அமர் பிரசாத் அட்ராசிட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share