×
 

சிங்கப்பெண் படை சாதனை..! பெண்கள் பாதுகாப்பில் புதிய மாற்றம்..! விளக்கிய காவல்துறை..!!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் நடவடிக்கைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை, மாநிலத்தின் காவல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளது. இந்தப் படை, பெண் அதிகாரிகளை மையப்படுத்திய ஒரு சிறப்பு பிரிவாக செயல்படுகிறது. இது பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு உடனடி மற்றும் திறமையான பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்தப் படை தொடங்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பொது இடங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவசர சூழல்களில் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு அர்ப்பணிப்பு.இந்தப் படையின் உருவாக்கம், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நீண்டகால தேவையின் விளைவு. பெண் காவலர்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த அமைப்பு, சாதாரண காவல் நடவடிக்கைகளுக்கு அப்பால், அதிரடி ரோந்து, உயர் அபாய சூழல்களில் தலையீடு, பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் சிறப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. 

சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடி படையினர் ஜூலை பத்தாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை காணாமல் போன ஒன்பது பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகளை மீட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப் பெண்கள் அதிரடி படையின் மாவட்ட களப்பிரிவுகள் ஜூலை 10 முதல் 16 வரை 390 புகார்கள் சம்பவ இடத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையின் மாவட்ட கலப்பிரிவுகளின் நடவடிக்கை 29 குற்ற வழக்குகள் பதிவு செய்ய வழிவகுத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

மேலும் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. சிங்கப்பின் சிறப்பு அதிரடி படையினரால் 3711 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரால் 9 ஆயிரத்து 572 இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: துஷ்ட சக்தி த.வெ.க. அரசு..! உயிருக்கு விலை வைக்கும் அவலம்... அதிமுக கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share