SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!
உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ் ஐ விவகாரம் தொடர்பாக வாதத்தை தொடங்கினார்.
தேர்தல் ஆணையம் 12 மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியது. இதில் பூத் லெவல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சேகரித்தனர். மம்தா பானர்ஜி இதை "சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது, மக்களை பெருமளவில் வாக்குரிமை இழக்கச் செய்யும் செயல்" என்று குற்றஞ்சாட்டினார். மம்தா பானர்ஜி ஜனவரி 2026-இல் தனிப்பட்ட ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் தேர்தல் ஆணையத்தையும், மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரியையும் பதிலளித்தவர்களாகச் சேர்த்தார். மனு சுமார் 101 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.
அதில், தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும், தன்னிச்சையான முறையில் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. மேலும், 8,100 மைக்ரோ-அப்சர்வர்களை சட்டவிரோதமாக நியமித்ததாகவும், இது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 2026 தொடக்கத்தில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தானே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிறார். இது அரிதான நிகழ்வு என்பதால் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எஸ் ஐ ஆர் விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு ஆறு முறை கடிதம் அனுப்பி இருக்கிறோம் என்றும் எந்த பதிலும் இல்லை எனவும் தனது தரப்பு வாதத்தை மம்தா எடுத்து வைத்தார். எஸ் ஐ ஆர் விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த வாக்காளரும் விடுபட்ட விடக்கூடாது என்பதை தங்களின் நிலைப்பாடு என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் SIR பணிகள் விறுவிறு..!! மேலும் 10 நாட்கள் அவகாசம்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!
மேற்குவங்க எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளில் என்ன பிரச்சனை என்பதை குறித்து எந்த தகவலும் தங்களது கிடைக்கவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தால் இடைப்பட்ட காலத்தில் என்ன சிக்கல் உள்ளது என ஆய்வு செய்வோம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பத்து நாட்கள் கூடுதல் அவகாசம் இருந்த போதும் தேர்தல் ஆணையம் ஏகபோகமாக செயல்படுவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து காரசார வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: நாளை கடைசி நாள்..!!