×
 

தமிழகத்தில் தொடங்கும் SIR பணிகள்..! சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் தீவிர ஆலோசனை...!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு. தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் முறைகேடுகள் நடைபெறும் இடமும் கூறி எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து வருகின்றன.

தமிழக அரசு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள கூடாது எனவும் கூறப்பட்டு வருகிறது. முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முதல்வருக்கு மறதி நோய்... SIR விவகாரத்தில் தலையிட்ட அண்ணாமலை...!

இருப்பினும் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடக்கும்... தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share