×
 

உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

பழிவாங்கும் வகையில் புலிப்பாண்டியை குறிவைத்து இந்தக் கும்பல் செயல்பட்டதாகவும், ஆனால் ஆள்மாறி இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

சிவகங்கையில் இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆள்மாறி கொலை செய்யப்பட்டிருப்பதாக கைதானவர்கள் தரப்பில் சொல்லப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆள்மாறாட்டத்தில் இந்தக் கொலை நடைபெற்றிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஊர்காவலன் கொலை தொடர்பான பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்ற தகவல்களும் தெரியவந்துள்ளன.

குறிப்பாக, ஆள்மாறி இந்தப் படுகொலை நடைபெற்றிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவரங்கள் முழுமையாக வெளிவந்தால், மீண்டும் பழிக்குப் பழியாக கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிடும் என்பதால், காவல்துறை இந்த விவகாரத்தை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் பலரும் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஓட ஓட வெட்டி வீசிய பயங்கரம்... தமிழகத்தையே மிரள விட்ட இரட்டை கொலையில் அதிரடி உத்தரவு...!

கடந்த ஜூன் 30ஆம் தேதி, திருப்பாச்சேத்தி மாத்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்காவலன் என்பவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தைப் போலவே, அப்போது ஜூன் மாதத்திலும் ஒரு கொலை சம்பவம் நடைபெற்றது.

இந்தக் கொலையை ஐந்து பேர் கொண்ட கும்பல் செய்ததாகவும், புதுக்குளம் பிரசாந்த் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், புலிப்பாண்டி சம்பவம் நடைபெற்ற அன்று தனது வீட்டில்தான் இருந்தார் என்று அவரது தந்தை சிசிடிவி காட்சிகளை காவல்துறையிடம் காண்பித்துள்ளார். இதன் காரணமாக புலிப்பாண்டி அந்த வழக்கில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளார்.

இதனால், புலிப்பாண்டியை கொலை செய்வதற்காக ஊர்காவலனின் நண்பர்கள் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது. தங்களது நண்பனை கொன்றதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக அவர்கள் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவ தினத்தன்று புலிப்பாண்டி கொடிகாடு கண்மாய் பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததாகவும், இதையடுத்து அவரது நண்பர்கள் உள்ளிட்ட சுமார் 18 பேர் அங்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு பேரை அந்தக் கும்பல் துரத்தித் துரத்தி பெரிய வாளால் வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதில் ஆள்மாறி, அங்கு இருந்தவர்கள் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 18 பேரில் இதுவரை 10 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை எப்போது கைது செய்வீர்கள், எப்போது விசாரணை நடத்துவீர்கள் என்று வலியுறுத்தி, அவர்களது உறவினர்கள் ஒருபுறம் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்குள் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஏன் இந்தப் பிரச்சினை தொடங்கியது, இந்தப் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி என்ன என்பது குறித்து விசாரித்தபோது, 2017ஆம் ஆண்டு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், அதில் பங்கு பிரித்துக் கொள்வதில் ஊர்காவலனின் தம்பிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஊர்காவலனின் தம்பி பிரசாந்தை மற்றொரு கும்பல் கொலை செய்ததாகவும், இதனால் கோபமடைந்த ஒரு கும்பல், மாற்றுக் கும்பலைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

அத்தகைய பழிக்குப் பழி சம்பவங்களின் தொடர்ச்சியில்தான் ஊர்காவலனும் கொல்லப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் வகையில் புலிப்பாண்டியை குறிவைத்து இந்தக் கும்பல் செயல்பட்டதாகவும், ஆனால் ஆள்மாறி இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஊர்காவலன் மீது கொலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், புலிப்பாண்டி மீதும் கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் காவல்துறை வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த ஆள்மாறி கொலைச் சம்பவத்தின் பின்னணி என்ன, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் மற்றும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நண்பர்களுக்குள் பழிக்குப் பழியாக ஒருவர் தரப்பைச் சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பினரை வெட்டுவதும், அதற்குப் பதிலாக மற்றொரு தரப்பினர் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்களைத் தாக்குவதும் என, இந்தக் குழுக்களுக்கு இடையே மாறி மாறி கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

புலிப்பாண்டி என நினைத்து பூப்பாண்டி, அதாவது தேவேந்திரன் மற்றும் பூப்பாண்டி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், காவல்துறை வெளிப்படையா

இதையும் படிங்க: காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share