×
 

பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்... குடி போதையில் பலவந்தப்படுத்தி சீரழித்த மனித மிருகம் கைது...!

கோவில்பட்டியில் மது போதையில் பெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்த மகன் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த 60வயது பெண்மணி. கணவனை இழந்தவர் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  மூத்த மகன் மாரிச்செல்வத்திற்கு  திருமணம் ஆகி கடந்த ஓராண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார்.  மற்ற இரண்டு பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.  

மாரிச்செல்வம் மட்டும்  தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். கட்டிட வேலை செய்துவரும் மாரிச்செல்வம் நேற்று முன்தினம் இரவு மது போதையில் தனது  தாயை அடித்து, உதைத்து பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் காயமடைந்த அந்த பெண்மணி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  மாரி செல்வத்தை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டுமழை பொழிந்த அமெரிக்கா... பற்றி எரியும் மத்திய கிழக்கு...!

மது போதையில் பெற்ற தாயையே மகன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர செயல் கோவில்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படிங்க: நீட் தேர்வர்கள் கவனத்திற்கு... ரீஃபண்​ட் குறித்து வெளியான அதி முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share