×
 

ஆதவ் அர்ஜுனாவின் மானநஷ்ட ஈடு வழக்கு... ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு.! கோர்ட் அதிரடி..!!

ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் சமூக ஊடகப் பதிவு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு, 258 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்திலும், கட்சியின் ஐடி விங் அதிகாரப்பூர்வ கணக்கிலும் ஜூன் 8 ஆம் தேதி பதிவு செய்தனர்.

இந்தப் பதிவு விரைவில் பரவியது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதை முற்றிலும் பொய்யானதும் அவதூறானதும் எனக் கருதி கடுமையாக எதிர்த்தார்.அமைச்சர் தரப்பில் உடனடியாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், அமலாக்கத்துறை குறிப்பிட்ட ஜான் பிரிட்டோ தனக்கு எந்தவித உறவும் இல்லாதவர் என்றும், தனது உறவினரான பி.ஜான் பிரிட்டோ வேறு நபர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த உறவினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்து, தான் அந்த வழக்கில் தொடர்பற்றவர் என விளக்கம் அளித்திருந்தார். மேலும், அமலாக்கத்துறை வட்டாரங்களும் குற்றவாளி ஜான் பிரிட்டோவின் தந்தை பெயர் இருதயராஜ் என்றும், அவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சுமார் 40 வயதுடையவர் என்றும் தெளிவுபடுத்தியிருந்தன.

ஆதவ் அர்ஜுனாவின் மனைவியின் தாய் லீமா ரோஸ் மார்ட்டின் உறவினரான ஜான் பிரிட்டோ வேறு நபர் என்பதும் தெளிவாகியது. இருந்தபோதிலும், சமூக ஊடகப் பதிவு அமைச்சரின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் ஐடி விங் மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். மனுவில், அந்தப் பதிவு கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்டதாகவும், அது தனது மரியாதையைப் பாதித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. மேலும், பகிரங்க மன்னிப்பு கேட்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறான பதிவுகளை வெளியிடத் தடை விதிக்கவும் கோரப்பட்டது.

இதையும் படிங்க: “சுயமரியாதையில், சமூக நீதியில், தமிழ் பற்றில்...” - பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின், கனிமொழி புகழாரம்...!

பதிவு பின்னர் நீக்கப்பட்டாலும், மன்னிப்பு அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டது.ஆகஸ்ட் 28 ஆம் தேதி நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பு வழக்கறிஞர், பதிவு முற்றிலும் பொய்யானது என்றும், இரு ஜான் பிரிட்டோக்களும் வெவ்வேறு நபர்கள் என்றும் வாதிட்டார். நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐடி விங் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. வழக்கு மேலும் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்று வழக்கின் விசாரணை நடந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: ஸ்டாலினின் மிசா சர்ச்சை... முதல்வர் விஜயை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share