×
 

ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுகவின் ஊழல் பட்டியலை வாசித்த ஈபிஎஸ்; எய்ம்ஸ் தாமதத்திற்கு ஸ்டாலின் அரசே காரணம் என குற்றம் சாட்டினர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், முதலமைச்சரின் வீர வசனங்கள் வெறும் 'பில்டப்' என்றும் அவர் சாடினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சுக்களை நகைச்சுவையோடு ஒப்பிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி  ஸ்டாலின் வீர வசனம் பேசுவதைப் பார்த்தால் எனக்குச் சினிமா நகைச்சுவைக் காட்சிகள்தான் ஞாபகம் வருகிறது. குறிப்பாக வடிவேலு - சுந்தர் சி காமெடியில் வருவதைப் போல, எல்லாம் வெறும் 'பில்டப்'தான். ஸ்டாலின் உண்மையில் ஒரு டம்மி பீஸ் என விமர்சித்தார்.

மதுரை மாநகராட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர் திமுக ஆட்சியில் மதுரை மண்ணில் கால் வைக்கவே முடியவில்லை. மதுரை மேயர் பன்றிக்குக் கூட வரி போட்டார். வரி வசூல் முறைகேடு காரணமாக 5 மண்டலக் குழுத் தலைவர்களும், மேயரும் ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின்  விமர்சனம்!

திமுக அமைச்சர்களின் ஊழல்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஈபிஎஸ் குற்றம் சாட்டினார் அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் நடந்துள்ள ஊழல்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் பயப்படுகிறார். அதேபோல, 30 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு குறித்து நிதியமைச்சர் பேசிய ஆடியோ ஆதாரங்கள் வெளிவந்தும் எந்தப் பதிலும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்குத் திமுகவே காரணம் என அவர் பதிலடி கொடுத்தார் மத்திய அரசைப் பச்சைப் பொய் சொல்லி முதல்வர் ஏமாற்றுகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிமுக ஆட்சியில் நாங்கள் அடிக்கல் நாட்டினோம்.ஆனால், திமுக அரசு முறையான அனுமதி கொடுக்காததால்தான் பணிகள் தாமதமாகின. தற்போது பிரதமர் மோடியே பச்சைக்கொடி காட்டிவிட்டார், இனி சட்டப்படி அனைத்து ஊழல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களைப் பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுகதான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவோம் என உறுதியளித்தார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், எந்த இடத்தில் விவாதிக்க அழைத்தாலும் தான் வரத் தயார் என்றும் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share