×
 

தமீன்மூன் அன்சாரிக்கு கடும் எதிர்ப்பு... பள்ளி வாசல் முன்பு இஸ்லாமியர்கள் இடையே அடிதடி...!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே பெரிய பள்ளி வாசல் பகுதியில் இஸ்லாமியர்கள் இரு தரப்பினர் இடையே மோதல் அடிதடி.

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இஸ்லாமிய அமைப்பான குமரி டிரஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் நாளை ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு தமீன்மூன் அன்சாரி  அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இதனால் இரு தரப்பினர் இடையே சில நாட்களாக  வாக்குவாதங்கள் நடைப்பெற்று வந்துள்ளது.காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று குளச்சல் பெரிய பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடையே குமரி டிரஸ்ட் அமைப்பு சார்பாக நிகழ்ச்சிக்கு வர கோரி நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் மோதலாக மாறி இரு தரப்பை சேர்ந்தவர்களும் மாறி, மாறி தங்களுக்குள் சாலையில் வைத்து கடுமையாக தாக்கி கொண்டார்கள்.இதில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி பைரோஸ் ராஜா என்பவர் படுகாயம் அடைந்தார்.

இதையும் படிங்க: “எங்க கூட்டணியை பார்த்து நீங்கள் ஏன் கவலைப்படுறீங்க?” - திமுகவை பார்த்து நறுக் கேள்வி கேட்ட எடப்பாடி...!

இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.மேலும் போலிஸாரும் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென போன் போட்ட ராமதாஸ்... தமிழக அரசியலில் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share