×
 

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஷாக்..! சுப்ரீம்கோர்ட் கர்நாடகாவுக்கு சாதகம்!”

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.

இதையும் படிங்க: ஏப்ரல் 29.ல் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! முக்கிய அறிவிப்பு..!

மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. திட்ட அறிக்கை கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு போதுமான முகாம் தந்திரம் ஏதும் இல்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேகதாது வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். 

இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய Dr. சுப்பையா கொலை வழக்கு..! "ஆயுள் தண்டனை தான்"...! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share