×
 

சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

திருவண்ணாமலையில் போதிய பேருந்து வசதி இல்லை என்று கூறி பக்தர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி சித்திரை உற்சவ விழா களைகட்டியது. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதிலும் சித்ரா பௌர்ணமி என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அந்த நாளில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி ஊர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து கூட வந்து கிரிவலம் செல்வார்கள்.

அந்த வகையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். 2026ஆம் ஆண்டு சித்திரை மாத பௌர்ணமி, ஏப்ரல் 30 இரவு 9:52 மணிக்குத் தொடங்கி மே 1 இரவு 11:07 மணி வரை நீடித்தது. இந்த நிகழ்வில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், தமிழக அரசு போக்குவரத்துத் துறை மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 11,823 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் மே 1 அன்று 565 பேருந்துகளும், மே 2 அன்று 35 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டிருந்தன. இருப்பினும், இந்த பிரம்மாண்டமான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், சில இடங்களில் பேருந்து வசதி போதுமானதாக இல்லாத சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமி கிரிவலம்..! தி.மலையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

குறிப்பாக திருவண்ணாமலையில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்ப போதுமான பேருந்துகள் இல்லாததால் கடும் அவதி ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், அதிகாரிகளை நோக்கி ஆவேசமாகக் கேள்விகள் எழுப்பினர். ஏன் போதுமான பேருந்துகள் இல்லை? லட்சக்கணக்கானோர் வருவது தெரிந்தும் ஏன் முன்னேற்பாடு செய்யவில்லை? என்று கேட்டனர். காலைல இருந்து நிக்கிறோம்.. சிறப்பு பேருந்து வருதுன்னு சொன்னீங்க.. எங்கதாங்க வருது” இந்த சரமாரி கேள்விகளை முன் வைத்தனர். திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் கடும் கோபமடைந்தனர். 

இதையும் படிங்க: தி. மலையில் அதிர்ச்சி சம்பவம்..! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! தொடர் விசாரணை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share