×
 

காதுல பூ சுத்துரீங்களா? ஆதவ் பேச்சு ஆச்சரியமா இருக்கு..! தமிழிசை விமர்சனம்..!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார்.

திமுக காலத்தில் இருந்த முதலமைச்சர் குடும்ப நிதி என்பதை ஒழித்திருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறி இருந்தார். திமுகவின் பண்ணையாறு மனநிலை தான் அவர்களின் தோல்விக்கு காரணம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தொடர்ந்து தோல்விகளை தேர்தல்களில் சந்தித்ததாக கூறியுள்ளார்.

திமுக அதிமுக இணைந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க நடந்த சூழ்ச்சியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி என் முடிவை ஏற்காததால் அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். யாரையும் ஆஃபர் கொடுத்து தமிழக வெற்றி கழகத்திற்கு அழைக்கவில்லை என்றும் அதிமுகவில் இருந்து வருபவர்களை அன்புடன் வரவேற்கும் இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது எனவும் கூறினார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தினர் தனது துறை எதுவென்றே தெரியாமல் செய்தியாளர்களை சந்திப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: "கரப்பான் பூச்சியை பிரதமர் விரட்டி அடிப்பார்'..! பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி..!

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பதிலளிக்காமல் மற்றொருவர் சொல்வதை எழுதிக் கொள்ள சொல்கிறார் என்றும் கூறினார். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா சொல்வது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினார். நான்கு எம்எல்ஏக்கள் எந்தவித கொடுக்கல் வாங்கலும் என்று அப்படியே கட்சியில் இணைந்து விட்டன ரா என்றும் இந்த ஏற்பாடு தான் ஊழல் எனவும் கூறியுள்ளார். தவெகவில் அனைவரும் காதில் பூ சுற்றிக்கொண்டே இருக்கிறார்களா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பில் இறுதிக் கட்டம்..!! விஜய் இந்த செய்தியை வெளியிடனும்..!! தமிழிசை வேண்டுகோள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share