"கரப்பான் பூச்சியை பிரதமர் விரட்டி அடிப்பார்'..! பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேட்டி..!
கரப்பான் பூச்சியை ஹிட் மூலம் பிரதமர் மோடி விரட்டுவார் என தமிழிசை பேசினார்.
இந்திய அரசியல் வரலாற்றில் சமீப காலத்தில் மிக வேகமாக வைரலான ஒரு நிகழ்வு என்றால் அது ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ தான். சில நாட்களுக்குள் இன்ஸ்டாகிராமில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களையும், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களையும் ஈர்த்த இந்த இயக்கம், வெறும் நையாண்டியாகத் தொடங்கியபோதும், இளைஞர்களின் ஆழமான விரக்தி, கோபம் மற்றும் எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக மாறியது.
இந்த இயக்கம் உருவானதற்கான துவக்கப்புள்ளி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்களின் ஒரு கருத்து. ஒரு வழக்கு விசாரணையின்போது, வேலை இல்லாத இளைஞர்கள் சமூக ஊடகங்கள், RTI மற்றும் ஊடகங்கள் வாயிலாக அரசை விமர்சிப்பதை அவர் “கரப்பான் பூச்சிகள்” மற்றும் “ஒட்டுண்ணிகள்” என்று ஒப்பிட்டுப் பேசினார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதி பின்னர் தன் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஏற்கெனவே கொதித்துக் கொண்டிருந்த கோபத்தை அது தூண்டிவிட்டது.
இந்தச் சூழலில், அபிஜித் தீப்கே என்ற 30 வயது இளைஞர் எக்ஸ் தளத்தில் ஒரு நையாண்டி பதிவை வெளியிட்டார்: “எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?” இந்தப் பதிவுக்கு இளைஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர்களின் பதில்களும் ஆலோசனைகளும் அபிஜித்தை ஒரு புதிய யோசனைக்கு இட்டுச் சென்றன. இப்படித்தான் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ பிறந்தது.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!
பாஜகவுக்கு போட்டியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உருவாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்தன. இதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்தார். கொரோனாவையே கண்டவர் பிரதமர் மோடி என்றும் கரப்பான் பூச்சியை ஹிட் மூலம் விரட்டி விடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பில் இறுதிக் கட்டம்..!! விஜய் இந்த செய்தியை வெளியிடனும்..!! தமிழிசை வேண்டுகோள்..!!