இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!
கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையை வெளிப்படுத்தினார்.
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையை வெளிப்படுத்தினார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் மனித குலத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது என்றும் மிருகங்களால் எத்தனை பூக்கள் கசக்கி வீசப்பட போகின்றனவோ எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இப்பொழுது தமிழகத்தில் சென்ற ஆட்சியில் நடந்த அவலங்களின் தொடர்ச்சியாக இன்று நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறினார்.
இதையும் படிங்க: "200 யூனிட் இலவசமாம்"... மொத்தமா போச்சு..! மின்வெட்டு குறித்து நயினார் விளாசல்..!!
ஆக பெண்களின் பாதுகாப்பில் குழந்தைகளின் பாதுகாப்பில் தீவிர நடவடிக்கை என்பதை விட போர்க்கால நடவடிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார். காவல்துறையும் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண்கள் படையும் எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற போர்க்கால நடவடிக்கை தேவை என்றார். ஒரு போரின் தீவிரத் தன்மையும் தேவை என்று கூறியுள்ள தமிழிசை, இன்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது கோவை பெண்ணின் பெற்றோர் மட்டுமல்ல பெண்ணை பெற்றோர் ஒவ்வொருவரும் கூட என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "தாய் மாமன் விஜய்"..! சிறுமி கொடூர கொலைக்கு என்ன சொல்லப் போறீங்க முதல்வரே..? நயினார் கேள்வி..!!