×
 

"SAFETY FIRST".. தூய்மை பணியாளர்களுக்கு பூட்ஸ் குடுங்க! தமிழக அரசுக்கு தமிழிசை வலியுறுத்தல்..!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி உடலுக்கு தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த வரலட்சுமி என்பவர் கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தற்போது சாலையில் மின்சார கம்பி ஒன்று அறுந்து விழுந்து உள்ளதை கவனிக்காமல் பணியை மேற்கொண்டுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பணிக்குச் சென்ற வரலட்சுமி காலை உணவு அருந்த வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கண்ணகி நகர் பகுதிக்குச் சென்று பார்த்த போது அவர் சாலையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும், குழந்தைகளின் கல்விச்சலவை தமிழக அரசை இருக்கும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த நிலையில் உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி உடலுக்கு தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் போராட்டம்: நேரில் சென்ற தமிழிசை.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாநகராட்சி கிளவுஸ் மற்றும் முட்டி வரை இருக்கும் பூட்ஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வரலட்சுமி குழந்தைகளை காப்பாற்ற அரசு முழு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் போராட்டம்: நேரில் சென்ற தமிழிசை.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share