மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!
திட்டங்களை மத்திய அரசும் முடக்கப் பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியதற்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்., ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தர்மத்திற்கு எதிரானது மட்டுமல்ல என்றும் தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்கு ஆக மட்டுமே செய்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
ஏனென்றால்.. சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை இப்பொழுது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் அதனால் தேர்தல் ஆண்டு கொடுக்கலாம் என்று சொன்னவர்கள் தான் திமுக என்று குறிப்பிட்டார். இவர்கள் அதைத்தான் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மக்களை ஏமாற்றுவது தானே எனவும் கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன் என்று கேட்டுள்ளார். ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் குடிக்கும் பழக்கம் உள்ள நபரால் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் 6 ஆயிரம் ரூபாய் டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறது என்கிறது என்றும் டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியை இந்த அரசாங்கம் சம்பாதிக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர்... அண்ணாமலைப் பல்கலை. யில் பரபரப்பு..!
குடும்பங்களை குலைத்துவிட்டு குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு என்றும் இந்த திமுக அரசு பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல் தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார். ஏற்கனவே உரிமை தொகை 2000 ஆக உயர்த்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருப்பதாக குறிப்பிட்டார். முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார் என்றும் பாராளுமன்ற தேர்தல்பொழுது கூட இந்த திட்டம் முடக்கப்படவில்லை என்பதை கூறிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலை விரித்து ஆடும் போதை... ஒதுங்கி நிற்கும் மாநில அரசு... வெளுத்து வாங்கிய TTV..!