ஆட்டிறைச்சிக்கு விலை நிர்ணயமா? தகவல் பலகை மட்டுமே... விளக்கம் அளித்த தமிழக அரசு!!
ஆட்டிறைச்சிக்கு விலை நிர்ணயம் இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதுக்குறித்து கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் டாக்டர் என் சுப்பையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அதன்படி இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும். இதற்காக தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தனி இணையதளம் உருவாக்கப்படும். தினமும் இறைச்சி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மணல் கொள்ளையர்கள் ஆதிக்கம்; யாரும் முடிவுகட்ட தயாராக இல்லை... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டிறைச்சி விலையை அறிவிப்பதற்கான தகவல் பலகை மட்டுமே தயாராகிறது. ஆட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கான விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய முடியாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஆட்டிறைச்சி மற்றும் நாட்டுக்கோழி இறைச்சிக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய உள்ளதாக வெளியான தகவலுக்கு கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 55 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்... அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!!