55 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்... அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!!
தமிழகத்தில் திடீரென 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, உயர்கல்வித்துறை செயலராக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரி & பதிவுத்துறை செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாக இயக்குநராக மதுசூதன் ரெட்டி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியராக வெ.சரவணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொத்தடிமை கூட்டத்தால் இந்த ஆட்சியை தாங்கி கொள்ள முடியவில்லை... வாட்டி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
மேலும், செங்கல்பட்டு மாவட்ட அட்சியராக சினேகா, மதுரை மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமார், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சுபபுத்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக கோ.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரி ஆணையராக எஸ்.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆணையராக அமித், நெல்லை ஆணையராக மோனிகா ராணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!