×
 

கொரோனாவை எதிர்க்கும் சக்தி தமிழர்களிடம் அதிகரிப்பு..! ஆய்வில் வெளியான அசரடிக்கும் தகவல்..!

தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதாக புதிய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தினமும் பதிவாகும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 6815 ஆக உள்ளது. வெகு விரைவில் இது 7000த்தை எட்டிவிடும் என்று தெரிகிறது. 324 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

டில்லி, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது. நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் தான் அதிக தொற்றாளர்கள் உள்ளனர். அங்கு 2053 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 96 பேர் புதிய தொற்றாளர்கள்.

இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. 7 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு.. பீதியில் மக்கள்..!

அதற்கு அடுத்தபடியாக குஜராத்(1109), மேற்கு வங்கம்(747), மஹாராஷ்டிரா(613), டில்லி(691),கர்நாடகா(559) பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டில்லி, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் இருவர் ஆண்கள், ஒருவர் பெண். 3 பேரும் இணைநோய்களுக்கு ஆளானவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மற்றும் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பயன்படுத்துவது நலம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது. தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் தொடர்பான நோய், நாள்பட்ட நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. எகிறும் எண்ணிக்கை.. மீண்டும் லாக்டவுன்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share