#BREAKING: ஆகாஷ் பாஸ்கரன் மீதான மேல் நடவடிக்கைக்கு தடை…. டாஸ்மாக் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டாஸ்மாக் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் மீது மேல நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மே 16 மற்றும் 17 தேதிகளில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். இந்த ரெய்டு, டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு தொடர்பாக நடைபெற்றது. இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு தொழிலதிபரான ரதீஷ் என்பவரின் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனைக்குச் சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது அமலாக்கத்துறைக்கு பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்தது. சோதனைக்குச் சென்றபோது வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு அமலாக்க துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என நீதிபதி கேட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால்தான் சீல் வைக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!
போதிய ஆதாரங்கள் இல்லாததால், கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமலாகத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்களில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரம் மீதான மேல் நடவடிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சீல் வைக்க உத்தரவிடுவதற்கு அமலாக்க துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றிய லேப்டாப் செல்போன்களை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: எங்க இருந்து அதிகாரம் வந்துச்சு? ஆட்டம் காட்டிய அமலாக்கத்துறை.. குட்டுவைத்த நீதிமன்றம்..!