×
 

டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு உள்ள தொடர்பு குறித்த கூடுதல் ஆவணங்களை தாக்க செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 16 மற்றும் 17 தேதிகளில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். இந்த ரெய்டு, டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு தொடர்பாக நடைபெற்றது. 

இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு தொழிலதிபரான ரதீஷ் என்பவரின் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனைக்குச் சென்றபோது அவர் வீட்டில் இல்லாததால் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையும் படிங்க: #BREAKING: சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

அப்போது வீட்டிற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சீல் வைத்தீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது வீடுகளுக்கு சீல் வைக்கப்படவில்லை என்றும் தங்களை தொடர்பு கொள்ளாமல் கதவை திறக்க வேண்டாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டதாகவும் அமலாக்க துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அளித்த தகவல்கள் போதுமானதாக இல்லை எனக் கூறிய நீதிபதி, மேலும் ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஈடி நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: எங்க இருந்து அதிகாரம் வந்துச்சு? ஆட்டம் காட்டிய அமலாக்கத்துறை.. குட்டுவைத்த நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share