திமுக கூட்டணியில் ஓட்டையா? திருமாவளவன் நச் பதில்!
தானும் வைகைச் செல்வனும் சந்தித்தபோது அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் பற்றிய தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாகவும், இது முதல் கட்டம்தான் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைச் சந்தித்ததை மேற்கோள் காட்டி, திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
வைகைச் செல்வனின் கருத்து, அதிமுகவின் அரசியல் உத்தியாகவும், திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இது வெறும் கருத்தாகவே உள்ளது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சிவக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், இந்தியாவின் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும், ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் என்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியை நடத்தியது.
இதையும் படிங்க: கனிம சோதனைக்கான ஆய்வகம் தேவை... முதலமைச்சர் ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை!!
இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்று இருந்த திருமாவளவன் ஹோட்டலில் தங்கியுள்ளார். அதே இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வனம் தங்கி உள்ளார். அப்போது இருவரும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தானும் வைகை செல்வன் சந்தித்தது தொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திருச்சியில் நானும் வைகை செல்வனம் ஒரே விடுதியில் தங்கி இருந்தபோது சந்தித்தோம். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வனுடன் அரசியல் எதுவும் பேசவில்லை., நட்பின் அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்ன தெரிவித்தார்.
தனக்கு ஒரு புத்தகத்தை வைகை செல்வன் பரிசளித்ததாகவும் பலரின் முன்னிலையில் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் தானும் அரசியல் பேசவில்லை அவரும் அரசியல் பேசவில்லை எனவும் அவர் இலக்கியத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தனக்கு விளக்கியதாகவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என வைகை செல்வன் கூறியதற்கு, அவர் எதற்காக அப்படி கூறினார் என்று தனக்கு தெரியவில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?