×
 

 தீபத் தூண் நீதிமன்ற அவமதிப்புவழக்கு: இரவு விசாரணை இல்லை, நாளை தனி நீதிபதி விசாரணை! 

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று இரவு விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், இரவு விசாரணை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திருப்பரங்குன்றம் கோயில் மலையில் உள்ள பழைய தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று இரவு விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், அது இரவில் இல்லை என்றும், நாளை (டிசம்பர் 5, 2025) காலை 10.30 மணிக்குத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரினார்.
கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் ஆண்டாண்டு காலமாக இந்தத் தீபத் தூணில் நடந்து வந்தது என்றும், இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டு விட்டது என்றும் மனுதாரர் வாதிட்டார். தீபத் தூண் அருகில் உள்ள தர்காவின் அமைப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், தீபத் தூணில் தீபம் ஏற்றவும், அதற்கான முழுப் பாதுகாப்பை காவல்துறை வழங்கவும் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி (2025) உத்தரவிட்டார். உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தும், டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றும் நாளில், தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.

இதையும் படிங்க: திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததால், மனுதாரர் ராம ரவிக்குமார் மீண்டும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக் கோரி முறையீடு செய்தார். நீதிமன்ற அவமதிப்பு முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோவில் செயல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே ஆஜராக உத்தரவிட்டார். மேலும், மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த CISF வீரர்களின் பாதுகாப்புடன் மனுதாரர் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், அரசுத் தரப்பில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டியும், மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதைக் காட்டியும், தீபம் ஏற்ற மலைக்குச் செல்ல மனுதாரரை அனுமதிக்கவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று (4, 2025) இரவு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அது இரவில் இல்லை என்றும், இன்று (டிசம்பர் 5, 2025) காலை 10.30 மணிக்குத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: "படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்!" திமுகவை வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share