×
 

எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக திருவலாங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ ஆஜராகினார்.

சிறுவன் கடத்தல் வழக்கில் மூன்றாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணைக்கு ஜெகன்மூர்த்தியும், கடத்தலுக்கு துணையாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக உத்தரவிடப்பட்டதுm இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது சரமாரியான கேள்விகளை நீதிபதி முன் வைத்தார்.

கூலிப்படையினரை வைத்து கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறை கூறுவது தவறு என்று ஜெகன் மூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, சிறுவன் கடத்தலில் ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளது கடத்தல் சம்பந்தமாக வழக்கறிஞர் சரத்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறுவனை கடத்தி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளது. காவல்துறையில் உள்ள பிரச்சனை காரணமாக ஒரு அதிகாரியை இழுக்க முயற்சி செய்ததாக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

அப்போது எந்த தொகுதி எம்எல்ஏ நீங்கள் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள், தங்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசத்தான் மக்கள் வாக்களித்தனர்., அதை மறந்து கட்டப்பஞ்சாயத்து செய்வதா? ஒரு எம்எல்ஏ மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர, கட்டப்பஞ்சாயத்து செய்ய யார் அதிகாரம் கொடுத்தது என நீதிபதி சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.

விசாரணைக்கு ஒரு எம்எல்ஏவே ஒத்துழைக்காவிட்டால், மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள் என்றும் பதவியை தவறாக பயன்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது., சிறுவன் கடத்தல் விவகாரம் உங்கள் கட்சிக்கு சம்பந்தப்பட்டதா? உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் உங்கள் பெயரை பயன்படுத்தினாலும் குற்றம்தான்., நீதிமன்றம் நினைத்திருந்தால் பத்து நிமிடத்தில் உங்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும்., விசாரணைக்கு கண்டிப்பாக ஒத்துழைத்தே ஆக வேண்டும் என்றும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ ஆஜரானார்.

இதையும் படிங்க: ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share