×
 

தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் வந்தியிறங்கிய 5 டன் கசகசா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்... பின்னணியில் யார்?

கண்டெய்னர் பெட்டிகளில் கடத்திவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல் – மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்க்கு மலேசியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் என்ற பெயரில் மோசடியாக கண்டெய்னர் பெட்டிகளில் கடத்திவரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல் – மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வந்த 40 அடி சரக்கு பெட்டகத்தை சந்தேகத்தின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சரக்கு பெட்டகம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திற்கு வந்தது தெரியவந்தது. மலேசியாவில் இருந்து பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தை திறந்து முழுமையாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் கசகசா மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

பறிமுதல் செய்யப்பட்ட கசகசாவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கசகசா மூட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த சரக்கை இறக்குமதி செய்த நிறுவனம், இதன் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு வந்த சரக்கு பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசகசா சிக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்!! முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சபதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share