×
 

பின் தலையில் ரத்த கசிவு... சிறையில் அருணாச்சலத்திற்கு நடந்தது என்ன?... தம்பி சொன்ன பரபரப்பு தகவல்...!

காவல்துறையினர் தாக்கியதால் தான் எனது அண்ணன் பின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி காவல்துறை கூறுவது போல் எனது அண்ணனுக்கு எந்தவித நோயும் கிடையாது. அவர் நன்றாக இருந்தார். காவல்துறையினர் தாக்கியதால் தான் எனது அண்ணன் பின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இதற்கு உரிய நீதி வேண்டும் என அருணாச்சலம் தம்பி சுடலைமணி தகவல்.

தூத்துக்குடி அமுதநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் அருணாச்சலம், இவர் மூன்றாவது மைல் பகுதி அருகே உள்ள ஒரு அரசு மதுபானக் கடையுடன் அமைந்த மதுபான கூடத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடை அடைத்த பின்பு சட்ட விரோதமாக மது விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி காலை அரசு மதுபான கடை அடைத்திருந்த நிலையில் சட்ட விரோத மது விற்பனையில்  அருணாச்சலம் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கே வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீஸ் மீனாட்சி சுந்தரம் மற்றும் தென்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் என நான்கு பேர் அவரை 120 மது பாட்டிலுடன் கைது செய்து தென்பாகம் காவல் நிலையம் அழைத்துச் சென்று அருணாச்சலம் மீது சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக நீதிமன்ற நடவடிக்கையையும் காவல்துறையினர் மேற்கொண்டு இருந்தனர். அதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் அருணாச்சலத்தை ஆஜர் படுத்தி உடல் தகுதி  சான்றும் பெற்றுள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றம் அழைத்து செல்வதற்காக தென்பாக்கம் காவல் நிலைய விசாரணை கைதிகள் வைக்கப்படும் அறையில் மற்ற விசாரணை கைதிகளுடன் வைத்து இருந்துள்ளனர். 

அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காவல்துறையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து குடும்பத்தினர் உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட அருணாச்சலத்தை காவல் துறையினர் சொந்த ஜாமினில் விடுவித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தலையில் காயம் ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வாலிபர் அருணாச்சலத்திற்கு பின் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரத்த கசிவு அதிகமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி அருணாச்சலத்திற்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார் 

இதைத்தொடர்ந்து நேற்று காலை அருணாச்சலம் இறந்ததை தொடர்ந்து அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு அருணாச்சலம் இறப்பிற்கு காவல்துறை காவல் நிலையத்தில் வைத்து அவரை தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இறந்துள்ளார் எனக்கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தென்பாகம் காவல் நிலையத்தில் அருணாச்சலத்தின் தந்தை நாகராஜ் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களது போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அருணாச்சலம் தம்பி சுடலைமணி இது குறித்து கூறுகையில்,  எனது அண்ணன்  நல்ல உடல் நலத்துடன் இருந்தார். அவருக்கு இதுவரை எந்த நோயும் கிடையாது. காவல்துறையினர் தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் காவல் நிலையத்தில் இரவு எட்டு முப்பது மணிக்கு மேல் எனது தாயார் வெளியே சென்று இருந்த நிலையில் அவர்களாகவே காவல்துறையினரே எனது அண்ணனை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விட்டு எங்களுக்கு தகவல் அளித்தனர். மேலும் சொந்த ஜாமினில் காவல்துறையினர் அவரை விடுவித்தனர் என தெரிவித்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட எனது அண்ணனுக்கு பின் தலையில் காயங்க காரணமாக இரத்த கசிவு அதிகமாக ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  மருத்துவர்கள் எங்களிடம் உறவினர்களிடம் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்தால் அவர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து உறவினர்கள் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நன்றாக இருந்த எனது அண்ணன் திடீரென்று நேற்று காலை உடல் நிலை மிகவும் மோசமாகி இறந்துவிட்டார். என்னுடைய அண்ணன் இறப்பிற்கு காரணம் காவல்துறை தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டு உயிரிழந்த்தார் என தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: கஸ்டடி மரணமா? உடல் நலக்குறைவா? - கைதி அருணாச்சலம் இறந்தது எப்படி? - தொடங்கியது உடற்கூராய்வு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share