திருப்பூரில் பயங்கரம்.. சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்...!
திருப்பூரில் அடுத்தடுத்த நான்கு வீடுகளில் சமையல் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்.
திருப்பூர் கல்லூரி அருகே உள்ள எம்ஜிஆர் நகர் புளியம் தோட்டம் பகுதியில் சாயா தேவி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் 42 வீடுகள் தகர கொட்டைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில் பிற மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பாக அதிக அளவிலான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் ஒரு வீட்டில் இருந்த சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் வெடித்துள்ளது. தொடர்ந்து அருகருகே இருந்த வீடுகளில் வீட்டு சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 4 சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்துள்ளது. இதில் 42 வீடுகளும் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்தன.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு, வடக்கு தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த பியை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து... 35 மாணவர்களின் நிலை என்ன?
மேலும் வாடகைக்கு ஆசைப்பட்டு தகரக் கொட்டைகளை சிறிது சிறிதாக வீடுகளை அமைத்து வாடகைக்கு விட்ட நிலத்தின் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நாளுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையிலும் கைவரிசை காட்டிய நிகிதா! அடுத்தடுத்த புகார்களால் மீண்டும் அப்ஸ்காண்ட்..!