திருவண்ணாமலை கோவில் பெயர் மாற்றம்? மக்கள் மத்தியில் பெரும் குழப்பம்... தமிழக அரசு விளக்கம்
திருவண்ணாமலை கோவில் பெயர் மாற்றம் தொடர்பாக வெளியாகும் தகவல் வதந்தி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை கோவிலின் பெயர் அருணாச்சலேஸ்வரர் கோவில் இந்த பெயர் மாற்றம் செய்யப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ வைரலானது. இது மக்கள் மத்தியில் பேச பொருளாக மாறியது. இதனை அடுத்து தமிழக அரசு உரிய விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், திருவண்ணாமலை கோவில் பெயர் மாற்றம் தொடர்பான தகவல் முற்றிலும் பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. '1940-ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி ம.பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்ட 'திருவண்ணாமலை வரலாறு' என்ற நூலில் இந்த கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாசலேசுவரர் தேவஸ்தானம் என்றுதான் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாய்ப்ப விட்றாதீங்க மாணவர்களே! மே 30ஆம் தேதி மீண்டும் அரசு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு தொடக்கம்...
பல ஆண்டு காலமாக திருவண்ணாமலை கோவில், அண்ணாமலையார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பு பொய் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: புரட்டி எடுக்கும் கனமழை..! அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு..!