×
 

வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்காக வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் விஞ்ஞானிகள் இணைந்து புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 134 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். புவிசார் குறியீடு பெறுவதற்காக 41 விலை பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் ஒன்பது பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்காக 24 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவர் செயலியை இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

முப்பதாயிரம் நபர்களுக்கு தேனீ வளர்ப்பு மதிப்பு கூட்டு இயந்திரங்களை இயக்குவதற்கு பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். நாகை, சிவகங்கை, கரூரில் புதிதாக அரசு வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 150 விவசாயிகள் அயல்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் இயற்கை எழில் கொஞ்சம் பூங்காக்களை உருவாக்க தனியாரிடமிருந்து 176 ஏக்கர் அரசு நிலம் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நிதி தர மறுக்கும் மத்திய அரசு..! வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!

ரூ. 331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் 495 கோடி ரூபாயில் 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தலங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வேளாண் விஞ்ஞானிகள் இணைந்து புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 134 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: முக்கிய துறைகளுக்கு ரூ.11 கோடி கடன்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிதியமைச்சர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share