×
 

முதலமைச்சர் விஜய் அறிவிப்பால் பிச்சை எடுக்கும் விவசாயிகள்... வெயிலில் திருவோடு ஏந்தி பரிதாபம்!!

ஏற்கனவே வாக்குறுதியில் கூறியபடி கடன் தள்ளுபடி வழங்காமல் வெறும் 50,000 வரை கூட்டுறவு சங்கத்தில பெற்றிருக்கக்கூடிய விவசாயிகள் தான் கடன் தள்ளுபடி என்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக விவசாயிகள் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் கடன் மட்டுமே தள்ளுபடி என்ற முதலமைச்சர் விஜயின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாய சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அறிவித்தது இந்த நிலையில் அவர்கள் வெற்றி பெற்று சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடனை  முழுமையாக ரத்து செய்யாமல் கண்துடைப்புக்காக விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்துள்ளனர்  தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆங்காங்கே தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்படம் நடத்தி வருகின்றனர். 

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்  2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஏக்கர் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் முழுவதும் தள்ளுபடி என்றும், ஐந்து ஏக்கர் மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் தற்போது வாக்குறுதிக்கு எதிரான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளீர்கள். இந்த அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: “சிங்கப்பெண் launch ஆகல... crime மட்டும் nonstop!”... TTV தினகரன் விளாசல்..!!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பின்பு கடந்த வாரம் அந்த வாக்குறுத்தியை நிறைவேற்றுகிறேன் என்கிற பெயரில் வெறும் 50,000 வரை கடன் வாங்கி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு தான் முழுமையான கடன் தள்ளுபடி என்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் அதேபோல தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற விவசாயிகளுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐந்து ஏக்கர் வரை இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்த நிலையில், வெறும் 50,000 வரை கடன் வாங்கி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு தான் தள்ளுபடி என்கிறது அதிர்ச்சியையும்,  ஏமாற்றத்தையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ச்சியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுட்டு வருகின்றனர். அந்த வகையிலதான் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அச்சங்கத்தினுடைய தலைவர் விஸ்வநாதன் தலைமையில பிச்சை எடுக்கும் போராட்டத்தில ஈடுபட்டனர். முதலமைச்சர் விஜய் தங்களை வந்து ஏமாற்றி விட்டார். ஏற்கனவே வாக்குறுதியில் கூறியபடி கடன் தள்ளுபடி வழங்காமல் வெறும் 50,000 வரை கூட்டுறவு சங்கத்தில பெற்றிருக்கக்கூடிய விவசாயிகள் தான் கடன் தள்ளுபடி என்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கு. இந்த அறிவிப்பு மூலம் விஜய் விவசாயிகளை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார் என கூறி அங்கு சாலையில் சென்றவர்கள், வாகனங்களில் சென்றவர்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தனர். 

தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்கள் கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ததோடு, இந்த கோரிக்கைகளை அடங்கிய மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: தோண்டி எடுக்கப்பட்ட உடல்... மதுராந்தகம் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தவெக கிளை பொறுப்பாளர் கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share