×
 

தமிழகமே ஷாக்... விஜய் ஆட்சியில் இப்படியா? - அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்...!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்ததாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தூய்மை, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 304 சிறப்பு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைகளைத் தொடர்ந்து பார்வையிட்டு, சுகாதார சீர்கேடு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிக் குறைபாடுகளைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். 

 

 புறநோயாளிகள் பிரிவில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், உள்நோயாளிகள் பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நோயாளிகளுடன் வருபவர்களுக்கு நிறங்களின் அடிப்படையில் அடையாள அட்டைகள் (Tags) வழங்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: திருச்சியில் அதிரடி சோதனை... ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்..!

இந்நிலையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த சம்பவம் தமிழகத்தையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி தமிழ்க்கொடி (68). சில தினங்களுக்கு முன்பு, தனது வீட்டில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்குள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், காலில் கட்டுடன் படுக்கையில் இருந்த தமிழ்க்கொடியின் காயம் ஏற்பட்ட பகுதியில், நேற்று நள்ளிரவு எலிகள் கடித்து குதறியதாக கூறப்படுகிறது.

அதிக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், எலிகள் கடித்ததை அவர் உடனடியாக உணரவில்லை. அருகில் இருந்த சக நோயாளிகள் தெரிவித்த பிறகே, தனது காலில் எலிகள் கடித்திருப்பது அவருக்குத் தெரியவந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக, மூதாட்டியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும்!! விசிக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share