சிதறிய தலை... சிதைந்த மூளை... பெற்ற தாயை தம்புல்ஸ்ஸால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகன் கைது...!
மணப்பாறையில் சொத்து பிரச்சனை காரணமாக தாயை தம்புல்ஸ்ஸால் தலையில் அடித்துக் கொலை செய்த மகன் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி செல்வி (வயது 50). இவருக்கு செல்வம், வெங்கடேசன், கவினேஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் வெங்கடேசனுக்கு கடந்த மூன்றறை வருடங்களுக்கு முன்பு திருமணம் முடித்து லாவண்யா என்ற மனைவியும் ஸ்ரீநிவி என்ற மகளும் உள்ளனர்.
மது போதைக்கு அடிமையான வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்து மூன்று வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வெங்கடேசன் தனது தாயுடன் கல்லாத்துப்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது அப்பா கணேசன் மற்றும் அம்மா செல்வி இருவரும் சொத்தை தனது அண்ணன் மற்றும் தம்பிக்கு மட்டும் பிரித்துக் கொடுத்து விட்டதாக கூறி அடிக்கடி வீட்டில் தகராறு செய்துவந்துள்ளார்.
அதேபோல் நேற்று இரவு சுமார் 11.45 மணிக்கு தனக்கும் சொத்தை பிரித்து கொடுக்குமாறு தாய் செல்வியிடம் கேட்டு தகறாறு செயாதுள்ளார். நீ வேலைக்கு போகாமல், எப்பொழுதும் மது போதையில் இருக்கிறாய் உனக்கு சொத்தை பிரித்துக் கொடுக்க முடியாது என கூறியதால் கோபமடைந்த வெங்கடேசன் வீட்டிலிருந்த உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் தம்புல்ஸை எடுத்து தனது அம்மாவின் தலையில் இரண்டு முறை தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் வினாத்தாளை கசியவிட்டது தேர்வு நிபுணர்கள்? சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!
இதில் அவரது அம்மா செல்வி தலையில் மூளை சிதறும் அளவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உறவினர்கள் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த செல்வி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செப்.1 முதல் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை.! இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!