×
 

போராடும் வருவாய் துறை ஊழியர்கள்.. அடக்கு முறையை ஏவும் திமுக... டிடிவி தினகரன் கண்டனம்..!!

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு சேவைகள் பாதிக்கும் அபாயம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி இருக்கிறார்.  வருவாய்த்துறை ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக டிடிவி தினகரன் சுட்டிக்காட்டினார்.

பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன் வராமல் இருப்பதாக கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு சேவைகளும் முழுமையாக முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது என்றார்.

இதையும் படிங்க: திமுக தேர்தலில் வீழ்வது உறுதி.. குற்றவாளிகளின் புகலிடம் தமிழ்நாடு... டிடிவி விமர்சனம்..!!

எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்திட வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share