தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!
தாம்பரத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் மீது தாக்குதல் நடத்திய தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சென்னை அருகே தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் சமீபத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. கட்டிட இடிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் ஆபரேட்டர் மீது தமிழக வெற்றி கழகம் கொடி கட்டிய காரில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருங்களத்தூர் அருகே ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பணியில் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய ஆபரேட்டர் தனது வேலையைச் செய்து கொண்டிருந்தார். அப்போது தவெக கொடி பொருத்தப்பட்ட கார் ஒன்று அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. காரில் வந்தவர்கள் ஆபரேட்டரை நோக்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரைத் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அந்த நபர்கள் தப்பிச் சென்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பொக்லைன் ஆபரேட்டர் போலீசில் புகார் அளித்தார். தவெகவினர் மீது தாக்குதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டது. பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல் நடத்திய தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜெய் கிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!
பொக்லைன் ஆப்ரேட்டர் அழகுதுரையை தாக்கிய ஜெய் கிருஷ்ணனை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து கட்சி தலைமை நீக்கியுள்ளது. ஜெய் கிருஷ்ணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தமிழக வெற்றி கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “நீதிக்கான முக்கிய முன்னேற்றம்”..! சுர்ஜித் தாய் அதிரடி ARREST..!! திருமாவளவன் பாராட்டு..!!