பூமித் தாயின் அருள்மடியை கிழித்த கொள்ளைக்கு பூட்டு...! பல்லடம் குவாரி..! தவெக ஆதங்கம்..!!
பல்லடம் குவாரியை குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகம் வேதனை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிய தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியமைத்தது. விஜய் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே முறைகேடான மற்றும் விதிமீறும் குவாரி நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் அரசு வருவாய் இழப்பைத் தடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தவெக ஆட்சியில் இயற்கை வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற திரு. டி.கே. பிரபு முன்னெடுத்துள்ள ஆய்வுகள், டிரோன் சர்வேக்கள் மூலம் பல மாவட்டங்களில் குவாரி முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. குறிப்பாக, டென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. உதாரணமாக, டென்காசி மாவட்டத்தில் 18 கல் குவாரிகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
மூடப்படும் முறைகேடான குவாரிகள் என்று குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. இத்தனை ஆண்டுகாலம் தமிழ்நாடு எப்படி சுரண்டப்பட்டிருகிறது என்பதற்கு உதாரணம் பல்லடம் கல்குவாரி என்று கூறியுள்ளது. 5 லட்சம் கன மீட்டருக்கு அனுமதி வாங்கிவிட்டு, 25 லட்சம் கனமீட்டருக்கும் அதிகமாக குடையப்பட்டிருக்கிறது என கூறி உள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்! சொத்துக்களை இழக்க நேரிடும்! ஹைகோர்ட் எச்சரிக்கை!
பூமித்தாயின் அருள் மடியை குடைந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளது. வெற்றிக்கழக அரசு அமைந்ததும் மின்னல் வேகத்தில் இந்த குடைசல் கொள்ளை ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றும் மூடப்பட்டது கல் குவாரி மட்டுமல்ல, நம் மண்ணின் ரத்தத்தை அறுத்தெடுத்து அதை நம்மிடமே ஓட்டுக்குப்பணமாக கொடுத்த அரசியலும் தான் என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: தென்மேற்கு பருவமழை குறையும்! ஜூனில் வெப்பஅலை தாக்கும்! தமிழகத்தை எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!