பொய் பிரச்சாரத்தின் உச்சம்..! நீட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசுதான்..! வதந்திகளுக்கு தவெக பதிலடி..!!
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது தமிழக அரசுதான் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் தொடர்பான ஒரு பொய்யான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. அந்தப் பதிவில், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது தவெக அரசு வழக்குத் தொடுத்ததாகவும், அந்த வழக்குகளை ரத்து செய்யச் சொன்னதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது முற்றிலும் பொய்யான தகவல் என்று கட்சி தெரிவித்துள்ளது.மாண்புமிகு உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் 18 வயதிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாகக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் புலன் விசாரணையைத் தொடரலாம் என்றும் மட்டும் தெரிவித்துள்ளது.
வழக்குகளை ரத்து செய்ய எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது தமிழக வெற்றி கழகம்.தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு தாமாக முன்வந்து ரத்து செய்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருதியே இந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தொழில் வளர்ச்சியில் வேகம் காட்டும் தவெக அரசு... ஸ்ரீபெரும்புதூரில் CM விஜய் அதிரடி விசிட்..!!
இந்த உண்மைகளை அறிந்தும் அறியாமலும், சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதை மட்டுமே தகுதியாகக் கொண்ட சிலர், தரமற்ற மற்றும் தவறான தகவல்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!