அரசு வழக்கறிஞர் நியமனம்... லஞ்ச குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி..! வழக்கு முடித்து வைப்பு..!!
அரசு வழக்கறிஞர் நியமன முறைகேடு வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது.
தமிழகத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறின. திமுக ஆட்சியில் பணியாற்றிய பல வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்த நிலையில், புதிய நியமனங்கள் தேவைப்பட்டன. இந்தப் பின்னணியில் ஜூன் 5, 2026 அன்று அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் இந்த நியமன செயல்முறையில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளரான எம். ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தவெக மாவட்டச் செயலாளர் என். மோகன்ராஜ் உள்ளிட்டோரின் பரிந்துரையின் அடிப்படையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் நியமனத்தில் தகுதி, அனுபவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்காமல், அரசியல் பரிந்துரை மற்றும் பணப் பரிவர்த்தனை அடிப்படையில் தேர்வு நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். ஒரு பதவிக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்களும் இந்த மனுவில் இடம்பெற்றிருந்தன. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அரசு தரப்பில், நியமனங்கள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடைபெற்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வளவு ஒழுங்கான முறையில் நியமனங்கள் செய்யப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பொதுவெளியிலும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!
விண்ணப்பதாரர்களின் தகுதி, அனுபவம், பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்டவை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் முழுமையாக மேற்கொள்ளப்பட்டதாக அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், நியமனங்கள் தற்காலிக அடிப்படையில் தொடங்கி, செயல்திறன் அடிப்படையில் நிரந்தரமாக்கப்படும் என்றும் விளக்கப்பட்டது. நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டது. அரசின் செயல்முறை சட்டப்பூர்வமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதாகக் கருதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பத்திரப் பதிவில் அதிரடி மாற்றம்..! 34C சட்டத் திருத்தம் ரத்து... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!