பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!
அமித்ஷா மோடியுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ள நடிகர் விஜயை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான ராஜேந்திரன் பேசினார்.
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சரும் , சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்
டி.எம். செல்வகணபதி , மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயல் வீரர்கள் கலந்து கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்று உறுதி ஏற்று உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். மக்களை தேடிய மருத்துவத்தின் மூலம் 2 கோடியே 60 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதனை ஐநா சபை பாராட்டியுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஹீரோவாக திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டு உள்ளார் .
இதில் இல்லத்தரசிகளுக்கு 8000 மதிப்பிலான கூப்பன் வழங்குவது , மகளிர் உரிமையைத் தொகையை 2000 ஆக உயர்த்தி தருவது , இளைஞர்களுக்கு 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக அறிவித்து உள்ளார். இந்த தேர்தல் அறிக்கையை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. இது மதசார்பற்ற கொள்கை கொண்ட கூட்டணி என்றால் ,
எதிர் அணியில் உள்ள கூட்டணி மதவாத கூட்டணி என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு நடவடிக்கையை பாஜக அரசு கொண்டு வந்த போது , அதனை ஆதரித்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக என்றும் எனவே இவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களையும், சாதனைகளையும்,
தேர்தல் அறிக்கை குறித்தும் வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்லி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும் என்றார்.
இதையும் படிங்க: ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!
எனவே கூட்டணி நிர்வாகிகள் , தோழர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் , அப்போது தான் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் மத சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , இளம் வாக்காளர்கள் சினிமா மாயையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் மின்னல் போல மறைந்து விடும் நடிகரை நம்பி ஏமாற கூடாது என்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறிய அமைச்சர் ராஜேந்திரன், சிபிஐ விசாரணைக்கு சென்ற நடிகர் வெளியே வரும் போது மிகவும் சந்தோசமாக காரில் வந்தார். இதிலிருந்து சிபிஐ விசாரணை எந்த அளவுக்கு நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. நடிகர் விஜய்யும் , அமித்ஷா மோடியும் மறைமுக கூட்டணி வைத்துள்ளது இதன் மூலம் புரிகிறது என்றும் இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: எங்க ஓட்டு வேணாமா..? நாமக்கல்லில் திமுக வேட்பாளரை ரவுண்டு கட்டிய மக்கள்..!!