×
 

“நான் இப்ப யாரு தெரியுமா?...” - மலேசிய தொழிலதிபரிடம் கோடிகளை சுருட்டிய தவெக எம்.எல்.ஏ... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்...!

தொழில் தொடங்குவதாக பணம் பெற்று ஏமாற்றி விட்டதாக மலேசிய தொழிலதிபர் தவெக எம்.எல்.ஏ. மீது புகார்

ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ.வாக இருப்பவர் சண்முகன். பொறியாளரான இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். கடந்த 2019.ம் ஆண்டு  மலேசியாவை சேர்ந்த வர்மன் என்பவருடன் சேர்ந்து கட்டுமான பொருள் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்காக சண்முகன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தம் ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்துள்ளது. தொடர்ந்து இதற்காக வர்மன் 2 கோடி ரூபாய் பணத்தை சண்முகன் மற்றும் அவரது மகன் பிரதீப் ஆகியோரிடம் வழங்கி உள்ளார்.

2 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட சண்முகன் தொடர்ந்து தொழில் தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணத்தை திரும்ப தருமாறு வர்மன் தொடர்ந்து கேட்டுள்ளார். இதனால்,  2022,2024.ம் ஆண்டுகளில் மூன்று தவணைகளில் 35 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி வழங்கிய சண்முகன் எஞ்சிய 1 கோடியே 65 லட்சத்தை திரும்ப வழங்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

இதற்கிடையே அவர் தேர்தலில் போட்டியிட்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற நிலையில் பணத்தைக் கேட்டு வர்மன் மற்றும் அவரது பிரதிநிதி ஈரோட்டை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். 

இதையும் படிங்க: DMK டூ TVK...! தவெகவில் இணையும் OPS..? பரபரப்புக்கு FULL STOP வைத்த பன்னீர்செல்வம்..!!

தற்பொழுது "நான் சட்டமன்ற உறுப்பினர் பணத்தை திரும்பத் தர முடியாது" உன்னால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மலேசிய தொழிலதிபர் வர்மன் தனது பிரதிநிதி சிவக்குமார் மூலமாக இன்று காவல் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்..

அந்த மனுவில் தொழில் தொடங்குவதாக கூறி தன்னிடம் இரண்டு கோடி ரூபாய் பணம் பெற்ற சண்முகன் 35 லட்சம் ரூபாயை திருப்பித் தந்த நிலையில் எஞ்சிய ஒரு கோடியே 65 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி விட்டதாகவும் பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

நேர்மையான ஆட்சி நடத்துவதாக கூறும் முதலமைச்சர் இதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  மேலும் இது தொடர்பாக முதலமைச்சருக்கும் புகார் மனு அனுப்பி இருப்பதாக சிவக்குமார் கூறினார்.

இதையும் படிங்க: நேற்று ஆய்வு... இன்று ஆணை..! மெட்ரோ நிர்வாகத்துக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share