ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!
தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜோசப் விஜய்ஆட்சி பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினரின் அராஜகமும் அத்துமீறலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஆய்வு , அரசு அதிகாரிகளுடன் ஆய்வு என அக்கட்சியை நிர்வாகிகள் அலப்பறை செய்து வருகின்றனர்.
சேலம் அருகே ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலகத்தில் அத்துமீறி வரும் தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகளால் சர்ச்சை வெடித்துள்ளது. நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உலா வந்து ஆய்வு நடத்தி ரீல்ஸ் போடும் தவெக நகர செயலாளரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து விஜய் படத்தை வைத்து ரீல்ஸ் போட்ட அவலம்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தொகுதிகளில் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலைகள், குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கி வருகின்றனர்.
அவர்களைப் போல் ஆய்வு நடத்துகிறேன் என்ற பெயரில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் கையில் கேமராவுடன் தவெக நிர்வாகிகள் அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதி அல்லாத தவெகவினர், அரசு விவகாரங்களில் தலையிடுவது மக்களிடையே கடும் அதிருப்தியையும், அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தவெக Vs திமுகவினர் இடையே கடும் மோதல்... இழுத்து மூடப்பட்ட காவல்நிலைய கதவு... நடந்தது என்ன?
இதனையடுத்து மக்கள் பிரதிநிதி அல்லாதவர்கள், அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தவெக பொதுச் செயலாளரும். அமைச்சருமான என்.ஆனந்த் கோரிக்கை விடுத்தார். அதன்பிறகும் தவெக தொண்டர்கள் அரசு அலுவலகங்களில் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக அரசு ஊழியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் இடங்கணச்சாலை நகராட்சியில் தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நாள்தோறும் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளை அலைக்கழித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தவெக கட்சியின் இடங்கணசாலை நகரச் செயலாளர் பாலமுருகன் , அந்த நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினரை போலவும் , நகராட்சி தலைவரை போலவும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு நடத்தி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு , அதனை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருவது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் இல்லாமல் , அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் இது போன்று அதிகாரிகளை மிரட்டி அலைக்கழிக்க வைப்பது இதுவரை நடைமுறையில் இல்லாததாகும். இதனிடையே நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் அலுவலகத்திற்குள் நுழைந்த தவெக கட்சி நிர்வாகிகள் சிலர் , முதலமைச்சர் விஜயின் படத்தை தாங்களாவே சுவரில் மாட்டியதோடு , அதனை படம் பிடித்து, ரீல்ஸாக வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தவெக கட்சி நிர்வாகிகளின் இது போன்ற அத்துமீறல் செயலுக்கு பல்வேறு அரசு அலுவலர்கள் சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாள் நட்சத்திரம் பாக்கணுமா..? வாயைத் திறங்க விஜய்..! விளாசிய TTV தினகரன்..!