×
 

விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தில்  இதுவரை எந்த கருத்துக்களும் பரிமாறப்படவில்லை என அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் NDA கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணைய வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு? இதுவரை எந்த கருத்துக்களும் பரிமாறப்படவில்லை என பதில் அளித்தார்.

NDA வில் துணை முதல்வர் பதவி தருவாக பேசுவதாக தகவல் இருக்கின்றதே என்ற கேள்விக்கு 
பல்வேறு உயர் மட்டத்தில் இருந்து, உயர்ந்த இடத்தில் இருந்து மக்கள் பணியாற்ற விஜய் வந்திருக்கிறார். மக்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என விரும்புகின்றனர்.அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்தார். பவன் குமார் விஜயிடம் பேசியதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படியான தகவல் எதுவும் எனக்கு எட்டவில்லை எனவும் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

சிபிஐ மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு, நேற்றைய தினம் விஜய்  டெல்லி அழைக்கப்பட்டார். அழைக்கப்பட்டவுடன் அங்கு சென்று அதற்கான பதிலை அளித்திருக்கிறார்.முதலமைச்சர் என்பதற்காக தான் இத்தனை உயர்நிலையில் இருந்து அனைத்தையும் விட்டுவிட்டு விஜய்  வந்திருக்கிறார் எனவும், அவர் மட்டும்தான் முதலமைச்சர் என்ற நிலையில் தான் மக்களுக்கு இருக்கின்றனர், எல்லோரும் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!

நடைபெறும்  சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைக்கும் எனவும் தெரிவித்த அவர்,
நேற்று ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களில் முகாம் சென்றோம்.  இதுவரை இப்படி கூட்டம் பார்த்ததில்லை என தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா ஆகியோருக்கு வருவதைப் போல மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர் எனக்கூறினார். மாற்றம் வேண்டும் என மக்கள் வருகின்றனர் எனவும், புதிதாக ஒருவர் தமிழகத்தில் வரவேண்டும், நல்லாட்சி தர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் எனவும், அதற்கு சிறந்த தலைவராக விஜய் இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது,  தொழில் அதிபர்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,
மீண்டும் தமிழகத்தில் திமுக வந்துவிடக் கூடாது என்பதில்  மக்கள் தெளிவாக இருக்கின்றனர் என்றார். மாற்றத்தை உருவாக்குகின்ற திறன் விஜய்க்கு மட்டும்தான் இருக்கிறது, வேறு யாருக்கும் இல்லை என்றும் கூறினார். 
தேர்தல்  ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு, 234 தொகுதிகளிலும் போட்டியிட சிறந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் எனக்கூறியவர், தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட விவகாரங்கள் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி பதிலளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

இதையும் படிங்க: கைவிரித்த காங்கிரஸ்... தவெக தனித்து போட்டியா? ... செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share