×
 

விஜய் விட்ட புருடா… உண்மையை list போட்ட தமிழக அரசு… முடிச்சு விட்டாய்ங்க…!

நாகையில் பிரச்சாரத்தின் போது விஜய் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பியதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று நாகையில் விஜய் பிரச்சாரம் நடத்தினார். அப்போது விஜய் பிரச்சாரத்தின் போது பேசியதில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. விஜய் பேசிய விஷயங்களில் மூன்று விவகாரங்களை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கியுள்ளது. அலையாத்தி காடுகளை காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கடல் சார் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல் என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

முதலாவதாக நாகையில் அலையாத்தி காடுகள், கடல் சார் கல்லூரி, காவல்துறையின் நிபந்தனைகள் குறித்து விஜய் கூறியது தவறான தகவல்கள் என்று லிஸ்ட் போட்டு கூறப்பட்டுள்ளது. மண்ணரிப்பை தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்தி காடுகளை காக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தவறான தகவல் என்று கூறப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள் அல்லது அலையாத்தி காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்றும் அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டர் ஆக இருந்தவை இன்று 90 சதுர கிலோ மீட்டராக பெருகி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு.. முதல்வரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு..!

மேலும், கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை என விஜய் பேசி இருப்பதாகவும்., ஆனால் உண்மை என்னவென்றால் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது எனவும் தெரிவித்து உள்ளது. 

அடுத்து, மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் என்றும் அனுமதி இல்லை என்கிறார்கள் எனவும் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா எனவும் விஜய் கேள்வி எழுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது எனவும் தவறான தகவல்களைப் பரப்பாதீர் என்று தெரிவித்து உள்ளதுடன், அதற்கான பத்திரிகை ஆதாரங்களை பின்னூட்டங்களாக தமிழக அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் வழங்கியுள்ளது. 

இதையும் படிங்க: கொள்கையே இல்லாத கூட்டம்.. லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share