×
 

ஆட்சியமைப்பாரா தளபதி..? மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்.! பெரும் எதிர்பார்ப்பு..!

3 வது முறையாக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியல் களம் முற்றிலும் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தேர்தலில் அறிமுகமான முதல் முறையிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் நீண்டகால இருமுனை ஆதிக்கத்தை உடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களைத் தவெக தவறவிட்டுள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது பெரும் பேசுபொருளாகி, அரசியல் சூழலை சிக்கலாக்கியுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி, தவெக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக 59 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

காங்கிரஸ் 5 இடங்களைப் பெற்றுள்ளது. தவெக தனித்து நின்று போட்டியிட்ட போதிலும், மக்கள் வாக்குகளில் சுமார் 35 சதவீதத்தைப் பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய அலையை உருவாக்கியுள்ளது. பல தசாப்தங்களாக திராவிடக் கட்சிகளுக்கு இடையே மாறி மாறி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஒரு புதிய அரசியல் சக்தி இவ்வளவு வேகமாக முன்னேறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பழக்க தோஷம் பாஸ்...!! - “தளபதி ஸ்டாலின்” - விஜயை மறந்த காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு...!

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால், அவர்களின் 5 உறுப்பினர்களுடன் தவெகவின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஆளுநர் அர்லேகர் விஜயை இரண்டு முறை சந்தித்தும், “பெரும்பான்மை ஆதரவு உறுதிப்படுத்தப்படவில்லை” என்று கூறி அழைப்பு விடுக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க இருக்கிறார். முன்னதாக இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வேண்டிக்கொள் விடுத்து இருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிய நிலையில் இன்று மாலை 4:30 மணிக்கு மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share