×
 

விஜயின் அடுத்த பிரச்சாரம் எப்போது? அனுமதி கேட்டு மனு கொடுத்த கட்சி நிர்வாகிகள்..!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சேலத்தில் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

2009-இல் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம், முதலில் சமூக சேவை மையமாக செயல்பட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தலைமையிலான கூட்டணியை ஆதரித்து, அக்கட்சியின் அமைப்பு வலிமையைப் பெற்றது. ஆனால் உண்மையான தேர்தல் சோதனை 2021 உள்ளூர் உடனடி தேர்தல்களில் வந்தது. சுயேட்சையாக 169 தொகுதிகளில் போட்டியிட்டு, 115 இடங்களில் வெற்றி பெற்றது. இது விஜயின் ரசிகர்களின் வாக்குச் சக்தியை நிரூபித்தது மட்டுமின்றி, த.வெ.க-வின் எதிர்காலத் தேர்தல் உத்திகளுக்கு அடித்தளமிட்டது.

தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்ட நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னோட்டமாக கொண்டு தமிழக வெற்றி கழகம் களமாடி வருகிறது. பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், மக்கள் சந்திப்பு என பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு தங்கள் கட்சி மற்றும் கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் வேலைகளை பார்த்து வருகிறது.

கரூர் சம்பவம் சற்று சருக்கலை கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து தமிழக வெற்றிக்கழகம் மற்றும் கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக அரசியல் களம் கண்டு வருகின்றனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டது. 

இதையும் படிங்க: விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

விஜயின் அடுத்த கட்ட பிரச்சாரம் சேலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் வரும் 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 30,000 பேர் பங்கேற்க இருப்பதாகவும், அதற்கு உரிய அனுமதி வழங்கக் கோரியும் காவல்துறையிடம் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். 

இதையும் படிங்க: மத உணர்வை புண்படுத்திட்டாங்க... தவெக தலைவர் விஜய், வேல்முருகன் மீது போலீசில் புகார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share