10 நிமிஷம் கரண்ட் கட்... மிதிச்சு உயிரே போச்சு... உண்மையை போட்டு உடைத்த பெண்...!
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதை நேரில் கண்ட பெண் ஒருவர் பேசினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் முதலமைச்ச ஸ்டாலின் உடனடியாக நிவாரணம் அறிவித்தார். நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: #BREAKING: கரூருக்கு உதவ மத்திய அரசு தயார்… உதவிக்கரம் நீட்டிய அமித் ஷா…!
இந்த நிலையில், விஜய் கூட்டத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை நேரில் கண்ட பின் ஒருவர் பேசினார். தனது தங்கையின் ஒன்றரை வயது குழந்தை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பத்து நிமிடம் கழித்து தான் வந்ததாகவும் தெரிவித்தார். அதற்குள் இருட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மிதிபட்டு குழந்தை இறந்ததாகவும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: டூயட் பாடி அரசியலுக்கு வந்தவரா MGR?... விஜயை சாடிய SV சேகர்...!