என்னை மன்னித்து விடுங்கள்… பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்…!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது.
கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். விஜய் கரூருக்கு செல்ல இருந்த நிலையில் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து உள்ளார். இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் தன்னை மன்னித்துவிடுமாறு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். உங்களை மாமல்லபுரம் அழைத்து வந்ததற்கும் தன்னை மன்னித்து விடுமாறு விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயம் கரூருக்கு வந்து உங்களை சந்திப்பேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: விஜய் பற்றி பேசிய சீமான்... என்ட்ரி கொடுத்த போலீஸ்! பிரஸ்மீட்டில் பரபரப்பு...!
வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்றும் என்ன உதவிகள் தேவை என்றாலும் செய்து தருகிறேன் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்த விஜய் உருக்கமாக தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு, திருமணம், கல்விச் செலவு என அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு! தன் கையாலேயே அனைவருக்கும் தேநீர் பரிமாறிய விஜய்..!