அய்யோ அவரு வர்றாரா? ஆள விடுங்க! பழனிசாமியை பார்த்ததும் எஸ்கேப் ஆன உதயநிதி!!
'இனி பிரசாரம் முடியும் வரை, தனி விமானமே எனக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என, உதவியாளர்களிடம் கறாராக கூறி விட்டதாகவும் தெரிகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இருவருக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பகல் 12:40 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. முக்கிய பிரமுகர்கள் என்பதால் எதிரெதிர் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தத் தகவல் தெரியவந்ததும் உதயநிதி உடனடியாக அந்த விமானப் பயணத்தை ரத்து செய்தார். ஆனால் பழனிசாமி அதே விமானத்தில் திருச்சி சென்றார்.
உதயநிதிக்கு அவசரமாக தனி விமானம் (சார்ட்டர்ட் ஜெட்) ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மதியம் 2:45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டார். இருவரது பயணமும் கடந்த வாரமே உறுதி செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. உளவுத் துறை அதிகாரிகள் இந்த விவரத்தை அறிந்தும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த உதயநிதி, உளவுத் துறை அதிகாரிகளை கடுமையாகக் கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வானதிக்கு தீவிர சிகிச்சை!! மேலும் 4 நாட்கள் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்ய மருத்துவர்கள் அட்வைஸ்!
மேலும், “இனி தேர்தல் பிரசாரம் முடியும் வரை எனக்கு தனி விமானமே ஏற்பாடு செய்யுங்கள்” என்று தனது உதவியாளர்களிடம் கறாராக உத்தரவிட்டதாகவும் தெரிகிறது. திருச்சி சென்ற உதயநிதி, லால்குடி உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். பழனிசாமி திருச்சி வந்ததும் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளுக்குச் சென்றார்.
இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தேர்தல் களத்தில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், இரு தலைவர்களும் ஒரே விமானத்தில் பயணிக்கும் சூழல் உருவானது பரபரப்பை ஏற்படுத்தியது. உதயநிதியின் திடீர் முடிவு மற்றும் தனி விமானப் பயணம், அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் இத்தகைய சிறிய சம்பவங்கள் கூட பெரும் கவனத்தை ஈர்க்கின்றன. பிரசார அட்டவணையில் இரு தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், உதயநிதியின் இந்த நடவடிக்கை அவரது பாதுகாப்பு மற்றும் வசதி குறித்து கட்சி வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக களம் இறங்கும் கமல்!! ஸ்கெட்ச் ரெடி! திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!