இன்னும் அவர் கெட்ட வார்த்தைல தான் திட்டல..! " பால்டாயில் பழனிச்சாமி"..! கிண்டலடித்த உதயநிதி..!!
இனிமேல் எடப்பாடி பழனிச்சாமி இல்லை அவர் பால்டாயில் பழனிச்சாமி என்று துணை முதல்வர் உதயநிதி கிண்டலடித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தொகுதி பெறுகிறது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளனர். திமுகவை பொருத்தவரை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது எங்கு சென்றாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பால்டாயில் என்று கூறி வருவதாகவும் எதற்காக அப்படி தன்னை கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது தன்னை விட்டுவிட்டு முதல்வர் ஸ்டாலினை பிடித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசினார். இன்னும் கெட்ட வார்த்தையில் மட்டும்தான் எடப்பாடி பழனிச்சாமி திட்டவில்லை என்றும் தான் உயிரை வாங்குவதாக கூறி வருகிறார் என்றும் தெரிவித்தார். தன்னை பால்டாயில் என்று எதற்காக கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் இனிமேல் அவர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்றும் பால்டாயில் பழனிச்சாமி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சு கீழ்த்தரமாக விமர்சிக்கும் இபிஎஸ்..!! பரப்புரையில் கனிமொழி குற்றச்சாட்டு..!
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக நீங்கள் தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இப்போது தன்னை விட்டு தலைவரை பிடித்துக் கொண்டதாகவும் தோல்வியின் பதற்றத்தால் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். டெல்லி அணியா தமிழ்நாடு அணியா என்ற மோதி பார்க்கும் தேர்தல் இது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சீமான் களமிறங்கிய காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்..! அனுமதி கொடுத்த போலீஸ்..!!