×
 

ROLL, CAMERA, ACTION..! பிரிண்ட் அவுட் வச்சு படிக்க 3 நாள் எதுக்கு.? விளாசிய உதயநிதி..!!

சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

ததமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்குப் பிறகு வெளியே வந்த அவர், முதலமைச்சரின் பேச்சு முழுக்க முழுக்க தயாரிப்பின்றி நடைபெற்றதாகவும், அது அரசியல் விவாதத்திற்கு உகந்ததாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.அமலாக்கத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க மூன்று நாட்கள் தேவைப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய உதயநிதி, இது பதிலற்ற பதிலுரை என்றும் பழிபோடும் பேச்சு என்றும் தெரிவித்துள்ளார்.

இது diversion tactics என்று குறிப்பிட்ட அவர், மொத்தத்தில் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல், ரோல் கேமரா, ஆக்ஷன் மோடில் க்ரிஞ்ச் டயலாக்குகளை பேசியிருக்கிறார் டம்மி சிஎம் என்று கடுமையாகச் சாடினார். எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த முறை நன்றாக தயாராகி வாருங்கள், முயற்சி செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள் மற்றும் அமலாக்கத்துறை கடிதங்களில் உள்ள பகுதிகளை மேற்கோள் காட்டிப் பேசி இருந்தார்.

சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் சில பகுதிகளையும் வாசித்த அவர், திமுக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுரைக்குப் பிறகு பதிலளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று உதயநிதி குற்றம்சாட்டினார். பேரவைத் தலைவர் முதலில் வாய்ப்பு தருவதாகக் கூறிய பின்னர் மாறியதாகவும், இது பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

உதயநிதி தனது கருத்தில், முதலமைச்சரின் பேச்சு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சினிமா பாணியிலான வசனங்களையும் மட்டுமே கொண்டிருந்ததாகக் கூறினார். மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் குறித்து எந்தத் தெளிவான பதிலும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார். இது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கும் முயற்சி என்றும், உண்மையான பிரச்சினைக ளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரம் என்றும் விவரித்தார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share